சமீபத்திய செய்தி

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் தொடர்பான மாகாண ஆணையாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நன்னடத்தை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

news-banner

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2023.11.15 ஆம் திகதி கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா சமன்மலி குமாரசிங்க அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

இங்கு மாகாண சிறுவர் பராமரிப்பு ஆணையாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி யமுனா பெரேரா, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு நாமல் லியனகே, அனைத்து மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர்கள், உதவி/ பிரதி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர்கள் மற்றும் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

logo