சமீபத்திய செய்தி

தேசிய இலத்திரனியல் மீள்தன்மையை வலுப்படுத்த இரண்டாவது சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டத்தைப் பாதுகாப்பு அமைச்சின் சைபர் கட்டளை நடத்துகிறது - ஜனவரி 30, 2026

news-banner

நாட்டின்  இலத்திரனியல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை முயற்சியாகப் பாதுகாப்பு சைபர் கட்டளை (DCC) அதன் இரண்டாவது சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டத்தை ஜனவரி 30, 2026 அன்று நடத்தியது. மகளிர் மற்றும் சிறுவர்  அலுவல்கள்  அமைச்சின் செயலாளரின் அழைப்பின் பேரில் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசியப் புலனாய்வுத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் - நடைபெற்ற இந்த அமர்வில், தேசிய அளவிலான அதிகாரிகள் மற்றும் கம்பஹா மாவட்டப் பெண்கள் மற்றும் சிறுவர்  அபிவிருத்திப்  பிரிவுகளின் அலுவலர்கள் உட்பட மகளிர்  மற்றும்  சிறுவர் அலுவல்கள்  அமைச்சின் அலுவலர்களும்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவின் 6வது மாடி கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. மேலும் இது 'சுத்தமான இலங்கை' தேசிய முயற்சியுடன் மூலோபாய ரீதியாகச் சீரமைக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பு தேசிய வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக பாதுகாப்பான இலத்திரனியற் சூழலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

பெருகிய முறையில் சிக்கலான இலத்திரனியல்  நிலப்பரப்பில் செல்லத் தேவையான திறன்களுடன் பொதுத்துறை அலுவலர்களைத் தயார்ப்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டது இத்திட்டம். இப்பாடத்திட்டம் வளர்ந்து வரும் இலத்திரனியல் அபாயங்கள், இலத்திரனியல்  சுகாதாரம் மற்றும் தகவல் பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியது. கூடுதலாக, இத்திட்டம் பாதுகாப்பான மின்-ஆளுமை உட்கட்டமைப்பு மற்றும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பை எடுத்துரைத்தது, நிஜ உலக சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் தணிப்பு யுத்திகளின் நடைமுறை விளக்கங்களுடன் முடிந்தது.

பாதுகாப்புச் சைபர் கட்டளைப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் வலுவான நிறுவனப் பங்கேற்புக் காணப்பட்டது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அதன் மூத்த அலுவலர்கள்  மற்றும் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர், மற்றும் பணிப்பாளர் நாயகம் (கடமை உள்ளடக்குதல்) ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இந்த ஈடுபாடு தேசிய இலத்திரனியற்  சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் அனைத்து அமைச்சுக்களிலும்  தகவல் அமைப்புகளின் மீள்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒருங்கிணைந்த அரசாங்க உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கிறது.